
சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், இதர உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கப்பலை கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களின் வாழ்க்கை என்பது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்