
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் குற்றங்களை தடுக்க முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு சீல் வைக்கப்பட்ட தனி விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விடுதியின் நுழைவு, வெளியேறும் வாசல்கள், கல்லூரி வளாகங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
கடந்த 1996ம் ஆண்டிற்கு முன் வரை தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை செய்த ராக்கிங் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வராமலே இருந்தது. அதன்பிறகு 1996ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு(17), சீனியர் மாணவர் ஜான் டேவிட்டால் ராக்கிங் கொடுமையால் படுகொலை செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்