Monday, May 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/02/large/794765.jpgபத்திரப்பதிவு துறையில் மோசடியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

திருப்பத்தூர்: பத்திரப்பதிவுத்துறையில் மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதிவுத்துறையில் இதுவரை 44 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் சிவன்அருள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ''தமிழகத்தில் 5,516 பத்திரங்கள் ஆள் மாறாட்டம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பத்திரங்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட்டு, அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள் அனைத்தும் பத்திரப்பதிவு பதிவுத்துறை அதிகாரிகள் மூலம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட பதிவுத்துறை அலுவலகம் கொண்டு வரப்பட்டு பதிவுத்துறை மாவட்ட அலுவலர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். எந்த பத்திரப்பதிவாக இருந்தாலும் தவறான ஆட்களிடம் (இடைத்தரகர்கள்) சென்று பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...