
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மே 5) தொடங்குகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை விதித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல்நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளன. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,262 மையங்களில் 8.69 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் 28,353 தனித்தேர்வர்கள், 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், மற்றும் 73 சிறைக் கைதிகளும் அடங்குவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்