
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மே 5) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 8.60 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக் கூடங்களில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். கரோனா பரவலால் கடந்த ஆண்டு (2020-21) பொதுத் தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய வகுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்