
திருவள்ளூர்: சென்னை குடிநீருக்காக கடந்த 5-ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்டுவரும் கிருஷ்ணா நதி நீர் 152 கிமீ தொலைவில் உள்ள தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் வந்தடைந்தது.
அப்போது,விநாடிக்கு 172 கன அடி என வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மலர் தூவி வரவேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்