
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏற்பட்ட விபத்தில் கிராம உதவியாளர் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (29). இவர் ஆளப்பிறந்தான் பகுதியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செந்தில் இன்று (ஜூன் 15) குடிக்காடு கண்மாயில் மண் அள்ளப்படுவது குறித்து வந்த புகார் தொடர்பாக நேரில் சென்று விசாரித்துவிட்டு அந்த தகவலை ஆளப்பிறந்தான் பகுதி சாலையோரமாக நின்று செல்போனில் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்