
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக நேற்று ஆலோசனை நடத்தினார். இப்பிரச்சினையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே சமரசம் ஏற்படுத்த, கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதிநடக்க உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை கோஷம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரையும் அவர்களது ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்