
சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உட்பட 2 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை வீசிச் சென்றது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய காவலர்களான நவின் மற்றும் விமல் (ஓட்டுநர்) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ரோந்து வாகனத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அதே பகுதி சீனிவாசபுரம், துலுக்கானத்தம்மன் கோயில் எதிரில் உள்ள கடற்கரையில் 2 கற்சிலைகள் ஒதுங்கியுள்ளன என்று தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்