
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 34 ஆண்டுகளாக ரூ.2-க்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளை ‘சைமா மருத்துவ மையம்’ வழங்கி வருகிறது. இதன் சேவையால் ஏழைகளின் மாத மருத்துவச் செலவு வெகுவாக குறைந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கால வாழ்க்கை முறையில் ஏழை, நடுத்தர குடும்ப வருவாயில் பெரும் பகுதியை மருத்துவத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது. அன்றாட செலவுகளை சமாளிக்கவே கஷ்டப்படும் மக்களுக்கு இதுபோன்ற திடீர் மருத்துவ செலவுகள் பெரும் சுமையாக மாறி, அவர்களை தடுமாறச் செய்துவிடுகின்றன. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி தேரடி வீதியில் இயங்கி வரும் சைமா (SYMA) மருத்துவ மையம் இதுபோன்ற ஏழைகளின் மருத்துவச் செலவுகளை தாங்களே ஏற்றுக்கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. இங்கு பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பொது மருத்துவர் ஆலோசனை மட்டுமின்றி, மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது, அப்பகுதி ஏழை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்