
சென்னை: ‘பே மேட்ரிக்ஸ்’ அடிப்படையில் ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்