
சென்னை: ‘நம்மைத் தாக்கி விளம்பரம் தேடுவோரை புறந்தள்ளி, மக்களுடன் பயணித்து முன்னேறுவோம்’ என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டதை அறிந்த ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்