
ஒகேனக்கல் காவிரியாற்றில் 3-வது நாளாக நேற்றும் நீர்வரத்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக தொடர்ந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து, இரு அணைகளின் பாதுகாப்பைக் கருதி காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு சுமார் 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்