
சென்னை: தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடக்கிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (ஜூலை 18) நடக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி வேட்பாளரை அதிமுக ஆதரிக்கிறது. அண்மையில் சென்னை வந்த திரவுபதி முர்மு, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்