
சென்னை: தமிழ், தமிழர்கள், தமிழ் இனத்தை மேம்படுத்துவதாக நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, ‘தமிழால் இணைவோம்’ என்ற இயக்கத்தை முன்னெடுப்போம் என்று வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அமெரிக்கா, கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாக விளங்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (‘ஃபெட்னா’) 35-வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில், 2020-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ் பீட விருது, இலக்கியச் செம்மல் தமிழ்கோ இளங்குமரனாருக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருது, ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்