
மதுராந்தகம்: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுராந்தகத்தை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் நாய்கடி மற்றும் பாம்புக்கடிக்கு மருந்துகள் உள்ளனவா என கேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்