
தாம்பரம்: விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றவருமான என்.சங்கரய்யாவின் 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றவருமான என்.சங்கரய்யா நேற்று (ஜூலை 15) 101-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்