
குரோம்பேட்டை: போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 4-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மு.சண்முகம் எம்.பி.,கி.நடராசன் (தொமுச), அ.சவுந்தரராசன், கே‌.ஆறுமுக நயினார் (சிஐடியு) உட்பட 66 தொழிற்சங்கங்களின் தலைவர்களும், போக்குவரத்து முதன்மைச் செயலாளர் முனைவர் கே.கோபால், நிதித்துறை இணைச்செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் மற்றும் 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்