
சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த கிசான் ட்ரோன் வாங்க, விவசாயிகளுக்கு கடனுதவி அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வான்வழி புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு, நில ஆய்வு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், விவசாயப் பணிகளிலும் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. வெளிநாட்டு ட்ரோன்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து, உள்நாட்டு ட்ரோன்களின் உற்பத்தியைப் பெருக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்