
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கங்கள் வென்ற பொதுப் பிரிவில் இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் தலா ரூ.1 கோடி பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஜூலை 29-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9-ம் தேதி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர். போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்