
சென்னை: இந்திய கடலோர காவல் படை சார்பில் அதிநவீன கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் வங்கக்கடலில் தேடுதல், மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தானியங்கி படகு உள்ளிட்ட புதியதொழில்நுட்பங்களை முதல்முறையாக பயன்படுத்தி வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர்.
கடல் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்திய கடலோர காவல் படை சார்பில் 10-வது கடல்சார் தேடுதல், மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி சென்னையை ஒட்டி வங்கக்கடலில் நேற்று நடந்தது. இதில் தேசிய கடல்சார் தேடுதல், மீட்பு பயிற்சி வாரியத்தின் தலைவரும், இந்திய கடலோர காவல் படை இயக்குநருமான வி.எஸ்.பதானியா, கிழக்கு பிராந்திய ஐ.ஜி. படோலா, டிஐஜி சின்மோய் மொஹாபத்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கப்பல், விமானப் போக்குவரத்து மற்றும் மீன்வளஅமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், 16 நட்பு நாடுகளை சேர்ந்த 24 பார்வையாளர்கள், தமிழக கடலோர காவல் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்