
சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடந்த 33-வது சிறப்பு மெகா முகாமில் 16.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசி போடும் பணி கடந்த2021 ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 2 தவணைதடுப்பூசி போட்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியும் போடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்