
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக வரும் 12-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு. சமீபகாலங்களில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். வரன்முறையற்ற ஆன்லைன் விளையாட்டுகளால் கற்றல் குறைபாடுகள், ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாகவும் அரசுக்கு தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்