
சென்னை: அதிமுகவில் பழனிசாமி தரப்பில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சட்டத்துக்கு புறம்பாக கட்சியை அபகரிப்பதை நீதியும், தர்மமும் ஏற்றுக்கொள்ளாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பழனிசாமி, கடந்த ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அந்தப் பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ம் தேதி இருந்த அதே நிலையே தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்