
சீர்மிகு நகரம் திட்ட நிதியின்கீழ், ரூ.83.58 கோடியில் மாம்பலம் கால்வாயில் நடைபெறும் தூர்வாருதல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க அலுவலர்களுக்கு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதிபோன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடிமதிப்பில் 1,033 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்