
சென்னை: நம் உணவுப் பழக்கம் எப்படி இருந்தாலும், அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று, சென்னையில் நடந்த ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், ஞாயிறுதோறும் சென்னையின் முக்கியமான சாலைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு நடனம், விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்