
சென்னை: தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 25 லட்சம் பயண அட்டை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வசிப்பிடத்தில் இருந்து கல்வி நிலையங்களுக்குச் சென்று வரும் வகையில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தொகையை ஈடு செய்வதற்காக ரூ.928 கோடியை போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்