
மதுரை/ராமேசுவரம்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 7-வது நபராக மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேல் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரை மாவட்டம், து.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பிய நிதி அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்