
சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள், சிறு தொழில் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துகேட்பு கூட்டம் கண்துடைப்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் வருவாயை ஈட்டுவதற்காக மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக, மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்தது. கட்டண உயர்வுக்கு அனுமதி கோரிதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ம் தேதி மனுக்களை சமர்ப்பித்தது. இதுதொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி கோவையிலும், 18-ம் தேதி மதுரையிலும், 22-ம் தேதி சென்னையிலும் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்