
புதுச்சேரி: புதுச்சேரியில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.2,200 கோடி சிறப்பு மத்திய உதவி தேவை என்று 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (செப்.3) நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தென்மண்டல மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்