
சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, வாரிய செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு செயல்பாட்டின் தொடர்ச்சியாக தமிழகத்தில் மேலும் 25 இடங்களில் ‘மீண்டும் மஞ்சப்பை' ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்