
சென்னை: தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் திமுக அரசின்சாதனை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பதை, ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற காவல்துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் காண முடிகிறது. துறைமுகங்கள்தனியார் மயமாக்கப்பட்டதால்தான் போதைப் பொருட்கள் இந்தியாவில் நுழைகிறது என்ற விசித்திரமான சில குற்றச்சாட்டுகளை அமைச்சர் பொன்முடி முன்வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்