
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைப்பு பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். பொதுப்பணித் துறை செயலர் க.மணிவாசன், முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப்பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஆசியாவின் 2-வது மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி ஹிலாரி இந்த நூலகத்தைப் பார்வையிட்டபோது, “இதுபோன்று பரந்து விரிந்த, மிக அதிகமான புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை வேறு எங்கும் கண்டதில்லை” என்று கூறினார். ஆட்சி மாற்றத்துக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், நூலகத்தைப் பராமரிக்காததால் சிதிலமடைந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்