
மதுரை: மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (23ம் தேதி) முதல் 3ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நாளை மாலை 4 மணக்கு நடைபெறும் விழாவில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து பேசுகிறார்கள். புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. கலை, இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்