
மதுரை: ‘மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும். கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது’ என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜக மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி, இணை பார்வையாளர் சந்தோஷ், மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்