
ஓசூரில் கடந்த சில நாட்களாக இரவு வேளையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகேப்பள்ளி ஏரி, பேடரப்பள்ளி ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு ஓசூர் பகுதியில் இடைவிடாது பெய்த 66.40 மி.மீ. கனமழையால் பேகேப்பள்ளி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரியின் அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியபடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தரைப்பாலத்தை நல்லூர் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பா (55) என்பவர் கடந்து செல்ல முயன்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்