
சென்னை: பதிவு செய்யப்படாத பள்ளி விடுதிகள் மற்றும் இல்லங்கள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
சென்னை ராயப்பேட்டையில், பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்த தனியார் பள்ளி விடுதியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். ஆய்வை தொடர்ந்து, அந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகளை சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்