
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட இபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் தொடர்ந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு எதிராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான கே.பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீ்ர்செல்வத்தின் ஒப்புதல் பெறாமல் கூட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்