
சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சூழல் விதிகளை மீறும் அடுக்குமாடி கட்டிடங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006-ம் ஆண்டு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி 20 ஆயிரம் ச.மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமானப் பணி தொடங்கும் முன்பே சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்