
சென்னை: வடகிழக்குப் பருவமழை காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கினார்.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதுதொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில், தலைமைச் செயலகத்தில் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்