
கோவை: கோவையில் எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு திரண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 31 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (செப்.13) சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையை அறிந்து எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு திமுக அரசைக் கண்டித்தும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பிய அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 400-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்