
திருவள்ளூர்: அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி சிறுமி டானியா பூரண குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பினார். சிகிச்சைக்கு நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறுவதாக நெகிழ்ச்சியுடன் சிறுமி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சவுபாக்யா தம்பதியின் மகள் டானியா (9). அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இவருக்கு அரிய வகை முகச்சிதைவு நோய் பாதித்து அவதியுற்று வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்