
சென்னை: மருத்துவம், பொறியியல், பள்ளி, போர்டு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் சேவையில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் 200-க்கும்அதிகமான பயிற்சி மையங்களுடன், 2.50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஆகாஷ் பைஜு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்ற 2 பேர் தேசிய அளவிலான தேர்வுப்பட்டியலில் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். பி.ஹரிணி தேசிய அளவில் 126-வது இடமும், ரினித் ரவிச்சந்திரன் 150-வது இடமும் பெற்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்