
சென்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வுக்கு கட்டுப்பாடு விதிப்பதை கண்டித்து பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்.
‘ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயில்வோரை வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்கள் மட்டும்தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். மற்ற நாட்களில் இதர விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் தேர்வு நடத்த வேண்டும்’ என்று போக்குவரத்து துறைஆணையர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்