
சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் புதிய தலைவர் நியமனத் தேர்தல் செப்டம்பர் 10-ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, மாநில முதன்மை ஆணையராக, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமாரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். மேலும், பாடநூல் கழகச் செயலர் ச.கண்ணப்பன் உட்பட 12 பேர் துணைத் தலைவர்களாக தேர்வாகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்