
சென்னை: சென்னையில் அண்ணா சாலைஉட்பட 15 பெரிய சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். உலக வங்கி உதவியுடன் சென்னை பெருநகரப் பகுதிக்கு 3-வது முழுமை திட்டத்துக்கான (2027-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணியில் சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஈடுபட்டுள்ளது. பயனாளர்கள் பங்கேற்பு அணுகுமுறை மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளை உள்ளடக்கிய சென்னை பெருநகர பகுதிக்கு அதாவது 1,189 சதுர கி.மீ.க்கு இந்த ஆவணம் தயாரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பயனாளர்களின் கருத்துகளை கேட்கும் வகையிலான பயிலரங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. பயிலரங்கை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மேயர் ஆர்.பிரியா, வீட்டுவசதி துறை செயலர் ஹித்தேஷ்குமார் மக்வானா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்