
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுலிடம் தேசியக் கொடியை வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்னும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி எம்.பி. மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் நேற்று தொடங்கினார். இதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்த அவர், நேற்று காலை பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்