
சென்னை: சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் தொகுதி உறுப்பினர் இ.கருணாநிதி, ‘‘திருநீர்மலையில் கம்பிவட ஊர்தி (ரோப்கார்) வசதி செய்ய அரசு முன்வருமா? தமிழகத்தில் எத்தனை கோயில்களில் ரோப் கார் வசதி செய்யப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன்’’ என்றார்.
இதற்குப் பதில் அளித்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, ‘‘திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், பழனி உள்ளிட்ட 5 கோயில்கள் தவிர, பழனி இடும்பன்மலை, கோவை அனுவாவி ஆஞ்சநேயர் கோயில் என 7 கோயில்களுக்கு ரோப் கார் வசதி அமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்