
சென்னை: திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த இளைஞரை போரூர் போலீஸார் கைது செய்தனர். பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி (59). இவர், சென்னை போரூர், அய்யப்பன்தாங்கல் விஜிஎன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சினிமா துறையைச் சேர்ந்த சிலர் பண உதவி செய்தனர்.
போண்டா மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது அவரது தீவிர ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் (34) என்பவரும் சென்றார். அவர், உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகினார். பின்னர், மருத்துவமனையில் போண்டா மணிக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். இதனால், போண்டா மணியின் குடும்பத்தினரிடம் ராஜேஷ் நன்மதிப்பைப் பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்