
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால், மேட்டூர் - எடப்பாடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சங்கிலி முனியப்பன் கோயில், ரெட்டியூர், கோல் நாய்க்கன்பட்டி, தெக்கத்திக்காடு, பூலாம்பட்டி, எடப்பாடி உள்ளட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்